Monday, December 28, 2009

ஜேம்ஸ் ஆலன் - ஒரு அறிமுகம்

ஜேம்ஸ் ஆலன்  லீசெஸ்டர் (இங்கிலாந்து) என்ற இடத்தில 28 நவம்பர் 1864 அன்று பிறந்தார். அவருக்கு 15 வயது இருக்கும் போது அவரது தந்தை கொடூரமான முறையில் கொல்லப் பட்டார். மேலும் அவரது குடும்ப தொழிலும் பாதிக்கப் பட்டது. இதனால் ஜேம்ஸ் ஆலன்  படிப்பை நிறுத்தி விட்டு, வேலை தேட ஆரம்பித்தார். தனது 38 வயது வரை பலரிடம் சிறு சிறு வேலைகள் செய்து ஜீவனம் நடத்தினார். தனது வாழ் நாளின் பிற் பகுதியில் அவர் எழுத்தாளனாக மாறி, சுமார் 9  வருடங்கள், தனது மரணம் வரை (1912) எழுதினார். அவர் குறுகிய காலத்தில் எழுதிய புத்தகங்கள் யாவும் உலக பிரசித்தி பெற்றவை. அவரது முதல் புத்தகமான Above Life's Turmoil ஐ தொடர்ந்து அவர் தனது சிறந்த படைப்பான As a man thinketh ஐ எழதினார். அவரது மறைவுக்கு பின்பு அவரது துணைவி அவரது எழுத்துக்களை உலகிற்கு அறிமுகம் செய்கிறார். 

No comments:

Post a Comment